ஊருக்குள் புகுந்த காட்டு யானை.. தெறித்து ஓடிய மக்கள்

6217பார்த்தது
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசம்பாளையம் கிராமத்தில் நேற்று (ஜூன் 30) இரவு காட்டு யானை புகுந்துள்ளது. இரவு முழுவதும் குடியிருப்பு பகுதியில் வலம் வந்த காட்டு யானையால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். தொடர்ந்து காட்டு யானையை மக்கள் விரட்டி அடிக்க முயன்றனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர், பட்டாசு வெடித்து யானையை காடுக்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி