சீரியல் நடிகர் ராகுல் ரவிக்கு முன்ஜாமீன்

50062பார்த்தது
சீரியல் நடிகர் ராகுல் ரவிக்கு முன்ஜாமீன்
குடும்ப வன்முறை புகார் தொடர்பாக சீரியல் நடிகர் ராகுல் ரவிக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. ராகுலுக்கு எதிராக அவரது மனைவி லட்சுமி எஸ் நாயர் அளித்த புகாரின் பேரில் சென்னை போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். இதையடுத்து, முன்ஜாமீன் கோரி ராகுல் ரவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ராகுல் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக லட்சுமி புகார் அளித்தார். இருவரும் காதலித்து 2020ல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னரே பிரச்சனைகள் தொடங்கியதாக லட்சுமி குற்றம் சாட்டினார். ராகுலுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். ராகுல் ரவி, சன் டிவியின் ஒளிபரப்பான நந்தினி, கண்ணான கண்னே, அபியும் நானும், அன்பே வா உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி