போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டால் மேலும் ஒரு விவசாயி பலி

83பார்த்தது
போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டால் மேலும் ஒரு விவசாயி பலி
டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது நடந்த கண்ணீர் புகை குண்டால் மேலும் ஒரு விவசாயி பலியாகி உள்ளார். இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 21ம் தேதி அரியானா-பஞ்சாப் எல்லையில் உள்ள கானவுரியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு கர்னைல் சிங் (62) என்ற விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று காலை இறந்தார். அதற்கு முன்னதாக இளம் விவசாயி ஷுப் கரண் சிங் என்பவர், போலீசாரின் கண்ணீர் புகை குண்டால் உயிரிழந்தார். அதனால் டெல்லி நோக்கி பேரணியை, நாளை வரை (பிப். 29) ஒத்தி வைப்பதாக விவசாய அமைப்புகள் அறிவித்தன.

தொடர்புடைய செய்தி