ரயில்வேயில் வேலை வழங்க நிலம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவிக்கும், அவரது 2 மகள்களுக்கும் டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேயில் வேலை வழங்க லஞ்சமாக நிலம் பெறப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.