சிவகாசியில் மேலும் ஒரு வெடி விபத்து

54பார்த்தது
சிவகாசியில் மேலும் ஒரு வெடி விபத்து
விருதுநகர் சிவகாசி அருகே நாரணாபுரம்புதூரில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை வெடி விபத்து நடந்துள்ளது. ரசாயன மூலப் பொருட்கள் தேக்கி வைத்திருந்த பட்டாசு ஆலையின் அறைகளில் இந்த வெடி விபத்து நடந்துள்ளது. இதில், அங்கிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. நல்வாய்ப்பாக ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை. தொடர்ந்து, இதுகுறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இந்த வெடி விபத்தால் மூன்று அறைகள் சேதமடைந்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி