சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி மூதாட்டி பலி

83பார்த்தது
சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி மூதாட்டி பலி
தஞ்சாவூர்: பாபநாசம் மேலவழுத்தூர் மெயின் ரோட்டில் வசித்து வரும் சுலைஹா பீவி (74) என்ற மூதாட்டி மருந்து வாங்கி விட்டு ஊருக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது  சாலியமங்கலம், பாபநாசம் நெடுஞ்சாலையில் அதிவேகமாக மாருதி காரை நண்பர்களுடன் ஓட்டி வந்த சிறுவன் மூதாட்டி மீது மோதிவிட்டு அருகில் இருந்த டூவீலர், கார் மீதும், சுவற்றின் அருகில் இருந்த தூண் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

இதில் சுலைஹா பீவி படுகாயமடைந்து பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஏற்கனவே மூதாட்டி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மூதாட்டியின் உறவினர் முகமது உசேன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மாருதி காரை ஓட்டி வந்த மட்டையான்திடல் மெயின் ரோட்டை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி