பள்ளி மாணவன் சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை

60பார்த்தது
பள்ளி மாணவன் சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை
தர்மபுரி: பென்னாகரம் அருகே பண்டஅள்ளி ஊராட்சி திப்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள் என்பவரது மூத்த மகன் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 5 நாட்களுக்கு முன், பெருமாள் அவரது மனைவி குமுதா ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கணவனிடம் கோபித்துக் கொண்டு, குமுதா தாசம்பட்டியில் உள்ள தனது தாய் வழி உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். தனது பாட்டி வீட்டில் இருந்த மாணவன் திப்பம்பட்டிக்கு சென்று தனது தந்தையை சந்தித்து விட்டு வருவதாக, நேற்று முன்தினம் மாலை சென்றுள்ளார்.

அதன் பின்னர், நேற்று (ஜுன் 13) காலை தாசம்பட்டி அரசு பள்ளி அருகே மர்மமான முறையில், முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இந்த கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து பென்னாகரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

தொடர்புடைய செய்தி