மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் மதுபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சொகுசாக உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற சிலர், கழிவுநீர் கால்வாயில் உடல் ஒன்று கிடக்கிறது என தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சடலம் என நினைத்து தீயணைப்புத் துறையினர் அவரை மீட்கச் சென்றுள்ளனர். ஆனால் அந்த நபர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவரை கால்வாய் உள்ளே இறங்கி தீயணைப்பு துறையினர் மீட்டனர்.