ஒரே நேரத்தில் 5 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக

83பார்த்தது
ஒரே நேரத்தில் 5 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக
தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக இன்று (ஜூன் 15) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அக்கட்சி இதற்கு முன்னரும் இடைத்தேர்தல்களை புறக்கணித்த வரலாறு உள்ளது. முக்கியமாக 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது பர்கூர், தொண்டாமுத்தூர், இளையான்குடி, கம்பம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையும் புறக்கணிப்பதாக அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அந்த தேர்தலில் ஐந்து தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றிப் பெற்றது.

தொடர்புடைய செய்தி