விபத்தில் சிக்கிய நடிகை அருந்ததி நாயர்

54625பார்த்தது
விபத்தில் சிக்கிய நடிகை அருந்ததி நாயர்
'சைத்தான்', 'பிஸ்தா', 'பொங்கி எழு மனோகரா' உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் அருந்ததி நாயர். இவர் நேற்று கேரளாவில் சாலை விபத்தில் சிக்கியுள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார். அருந்ததி நாயரின் நிலை குறித்த அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் விரைவில் வெளியிடும் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்தி