ரசிகரின் தந்தை நினைவேந்தல் நிகழ்ச்சியில் நேரில் சென்று நடிகர் சூர்யா மரியாதை செலுத்தியுள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சூர்யா நற்பணி இயக்கத்தின் மாநில தலைவர் பரமு அவர்களின் தந்தை வயது முதிர்வு கரணமாக கடந்த 7-ம் தேதி அன்று காலமானார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாததால் நேற்று நடந்த அவரின் 16-ம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு, பரமு அவத்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுடன், மறைந்த பரமுவின் தந்தையின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.