சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று இரவு 11 மணியளவில் சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தவறுதலாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் டிஆர்ஜி வீரர் உயிரிழந்தார். மேலும், ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதில், யாருடைய ஆயுதம் தற்செயலாக செயலிழந்தது என்ற தகவல் வெளியாகவில்லை.