குடிபோதையில் நள்ளிரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக சுற்றித் திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் சிரிசில் பகுதியைச் சேர்ந்த ஜெய்பால் (35) என்ற நபர் நள்ளிரவில் காவல் நிலையம் முன்பு ஆடைகள் எதுவும் இல்லாமல் நிர்வாணமாக சுற்றித் திரிந்துள்ளார். போலீசிடம் வாக்குவாதம் செய்து சுமார் இரண்டரை மணி நேரம் அங்கேயே சுற்றித் திரிந்துள்ளார். பின்னர் போலீசார் அவரிடமிருந்து போனை பிடுங்கி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.