மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதி, வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் தற்போது வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அமைச்சர் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அவரை சந்தித்தாக தகவல் வெளியானது.