மகளிர் உரிமை தொகையை வைத்து மது அருந்திய பெண்

21822பார்த்தது
மகளிர் உரிமை தொகையை வைத்து மது அருந்திய பெண்
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி கீதா (54). இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் ஹோட்டலில் வேலை பார்க்கும் கீதா மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். அவ்வப்போது குடித்துவிட்டு எங்கேயாவது படுத்துவிட்டு ஒரு நாள் கழித்து வீட்டிற்கு வருவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த மகளிர் உரிமை தொகையை எடுத்துக்கொண்டு சென்று குடியாத்தம் பகுதியில் மது அருந்திவிட்டு மயங்கி கிடந்துள்ளார். அவரை பரிசோதித்ததில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி