'குரங்கு சரவணன்' பெயரால் கடுப்பான நீதிபதி

64பார்த்தது
'குரங்கு சரவணன்' பெயரால் கடுப்பான நீதிபதி
பொதுவாக பட்ட பெயர் வைத்து நம்மில் அழைப்பது தற்போது சாதாரணமாகிவிட்டது. சில சமயங்களில் அது எல்லை மீறி செல்வதும் உண்டு. இந்நிலையில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு பட்டப்பெயர் வைத்து அழைக்கக்கூடாது என நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. வழிப்பறியில் ஈடுபட்டவரின் பெயரை குற்றப்பத்திரிகையில் 'குரங்கு' சரவணன் என குறிப்பிடப்பட்டதற்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் கண்டித்துள்ளது. நமது பெயர் நம் அடையாளம் எனக் கூறி, வழக்கு ஆவணங்களில் இருந்து குரங்கு என்ற வார்த்தையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி