மஹாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா (ஷிண்டே) தரப்பு அமைச்சர் ராம்தாஸ் கதம், "சிவசேனாவுக்கு பா.ஜ.க துரோகம் செய்கிறது.நாங்கள் பிரதமர் மோடி, அமித் ஷாவை நம்பித்தான் வந்தோம். ஒவ்வொருவரும் தங்களது கட்சி வளரவேண்டும் என்று விரும்புவது வழக்கம். அதற்காக உங்களை நம்பியவர்களின் கழுத்தை அறுக்காதீர்கள். எங்களுக்கு மீண்டும் மீண்டும் துரோகம் செய்தால் எதிர்காலத்தில் பா.ஜ.க.வை மக்கள் நம்ப மாட்டார்கள். பா.ஜ.க மோசமான அரசியல் செய்கிறது." என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.