ஆட்டுகிடாயை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு

24689பார்த்தது
ஆட்டுகிடாயை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு
ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே கோவில் திருவிழாவில் ஆட்டுகிடாயை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி மயங்கி விழுந்து உயிரிழந்தார். பரண் கிடாய் பூஜையில் நல்லகவுண்டன்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்த பழனிசாமி (45) உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட பூசாரிகள் வாழைப்பழத்தை ரத்தத்துடன் கலந்து சாப்பிட்டு உள்ளனர். அப்போது, சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்த பழனிசாமியை கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த நிலையில், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதால் உறவினர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி