உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே பர்தா அணிந்த இஸ்லாமிய பெண் ஒருவர் இந்து ஆண் நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார். இருவரும் ஒரே வங்கியில் வசூல் முகவர்களாக வேலை செய்கிறார்கள். இதனைப் பார்த்த இஸ்லாமியர்கள் அந்த பெண்ணை மடக்கி சரமாரியாக தாக்கினர். பின்னர், அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அந்த கும்பலை விரட்டினர். தொடர்ந்து போலீசில் புகார் அளித்த நிலையில், பெண்ணை தாக்கிய 6 பேரை போலீசார் அவர்களது ஸ்டைலில் விசாரித்து அனுப்பி வைத்தனர்.