தென்காசியில் உலா வந்த சிங்கம்?

54பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெட்ரோல் பங்க் ஒன்றில் சிங்கம் உலா வந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், அந்த காட்சிகள் தென்காசியில் எடுக்கப்பட்டது இல்லை என வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. வீடியோவில் வரும் விளம்பர பலகைகளில் வடமொழி எழுத்துக்கள் இருப்பதால், அது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது இல்லை என தகவல் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி