பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நீதிபதி

571பார்த்தது
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நீதிபதி
பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க வந்த பெண்ணிடம் மாஜிஸ்திரேட் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவின் கமலாபூர் குற்றவியல் நடுவரின் அறைக்கு, கடந்த 16ம் தேதி அப்பெண் சென்றுள்ளார். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து தனது கணவரிடம் அப்பெண் தெரிவித்ததையடுத்து, அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி கவுதம் சர்க்கார், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சத்யஜித் தாஸ், கமலாபூர் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தலைமையிலான 3 பேர் குழு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி