நாளொரு நாலடியார்

1268பார்த்தது
நாளொரு நாலடியார்
இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண.
நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பப்பூ.
அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப.
முன்னை வினையாய் விடும்.


பொருள்:
அடம்பங் கொடியின் மலர்களை அன்னங்கள் கோதிக் கிழிக்கும் அலைகடலினது குளிர்ச்சியாகிய கரையையுடைய மன்னனே! சிலர் துன்பம் மிகுந்த மனமுடையவராகி யாவரும் காண, பொ¢ய வீடுகளின் தலைவாயிலில் நின்று பிச்சை கேட்டு வருந்தும் செயல் எல்லாம் முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனே ஆகும். (வறுமைக்குக் காரணம் தீவினையே).

டேக்ஸ் :