NIA அதிகாரிகள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு

64பார்த்தது
NIA அதிகாரிகள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு
மேற்கு வங்கத்தின் பூபதிநகர் பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியின் வீட்டில், 2022ம் ஆண்டு டிசம்பரில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் 8 பேருக்கு தேசிய புலனாய்வு முகமை சம்மன் விடுத்தது. இந்த வழக்கில் இருவரை விசாரணைக்கு அழைத்து செல்ல வந்த அதிகாரிகைளை அப்பகுதி மக்கள் தடுத்தனர். பின்னர் அதிகாரிகளை பொதுமக்கள் தாக்கியுள்ளனர். இந்நிலையில் அதிகாரிகளுக்கு எதிராக திரிணாமுல் கட்சி நிர்வாகிகள் குடும்பத்தினர் பாலியல் புகார் அளித்தனர். அதிகாரிகள் மீது ஐபிசி பிரிவு 354-இன் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி