காதலி உடலை சாக்குப்பையில் கட்டி வீசிய காதலன்

77பார்த்தது
காதலி உடலை சாக்குப்பையில் கட்டி வீசிய காதலன்
மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் 57 வயது பெண் ஒருவர் குடும்பம் இன்றி தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவருடன் 53 வயது ஆண் நண்பர் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் அந்த பெண்மணி உயிரிழந்துள்ளார்.
ஆனால் அவருக்கு இறுதிச்சடங்குகள் செய்ய அந்த ஆண் நண்பரிடம் பணம் இல்லாததால் பலரிடம் உதவி கேட்டு வந்துள்ளார். இதனால் 3 நாட்களாக பெண்மணியின் பிணம் அந்த வீட்டிலேயே கிடந்துள்ளது. அதனால் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்ப்பக்கத்தினர் கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த பெண் உடலை சாக்கு பையில் கட்டி சாலையில் வீசி சென்றுள்ளார். பின்னர் போலீசார் அந்த உடலை கைப்பற்றி இறுதி சடங்கு செத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி