இது எங்களோட இலவச பஸ்.. ஓட்டுநரை மிரட்டிய பெண்கள்..

54பார்த்தது
இது எங்களோட இலவச பஸ்.. ஓட்டுநரை மிரட்டிய பெண்கள்..
ஹைதராபாத்தில் இருந்து சூர்யாபேட்டைக்கு அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. ​​நக்கீரேக்கல் பேருந்து நிலையத்தில் 3 பெண்கள் பேருந்தை நிறுத்தி, பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் வருவதால் ஓட்டுநரை நிறுத்த கூறியுள்ளனர். 5 நிமிடம் நிறுத்திய பின் சக பயணிகள் சண்டையிட்டதால், ஓட்டுநர் பேருந்தை இயக்கினார். இதனால், கடுப்பான அந்த பெண்கள் “இது எங்களோட இலவசப் பேருந்து.. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்க வேண்டும். சூர்யாபேட்டை வந்ததும் ஓட்டுநரை அடிப்போம்” என மிரட்டியுள்ளனர். தொடர்ந்து, ஓட்டுனர் பேருந்தை போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தினார். பின்னர், அந்த பெண்கள் அமைதியாகவிட்டனர்.

தொடர்புடைய செய்தி