போலீசார் - போக்குவரத்து துறை மோதலை தீர்க்க ஆலோசனை

70பார்த்தது
போலீசார் - போக்குவரத்து துறை மோதலை தீர்க்க ஆலோசனை
தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் அமுதாவுடன் போக்குவரத்து துறை செயலர் பணீந்தரரெட்டி இன்று (மே 25) சந்திக்கவுள்ளார். போலீசார் மற்றும் போக்குவரத்துத் துறை மோதலை சுமூகமாக தீர்ப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது. யூனிபார்மில் இருந்த காவலரை அரசுப் பேருந்து நடத்துநர் டிக்கெட் எடுக்க சொல்லிய விவகாரத்தை அடுத்து இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அரசுப் பேருந்தை நிறுத்தி போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். இந்த போக்கை நிறுத்த இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி