75வது குடியரசு தினம்: ஆளுநர் தேசிய கொடியேற்றுகிறார்...

79பார்த்தது
75வது குடியரசு தினம்: ஆளுநர் தேசிய கொடியேற்றுகிறார்...
நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் இன்று காலை 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் 25 துறைகளின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இடம்பெற உள்ளது. மெரினா கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி