ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆற்றில் மூழ்கி பலி

24400பார்த்தது
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆற்றில் மூழ்கி பலி
குஜராத்தின் பொய்ச்சா கிராமத்தில் உள்ள நர்மதை ஆற்றில் நேற்று (மே 14) சூரத்தில் இருந்து வந்த 17 பேர் கொண்ட குழு புனித நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது 6 சிறுவர்களுடன், 45 வயது மதிக்கத்தக்க நபர் உட்பட 7 பேர் ஆற்றில் மூழ்கினர். சம்பவம் நடந்து 24 மணி நேரம் ஆகியும் இன்னும் ஒரு உடலைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர். தற்போது உள்ளூர் நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களும் தீயணைப்பு துறையினருடன் ஆற்றில் தேட ஆரம்பித்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி