தேர் விபத்து - அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

61பார்த்தது
தேர் விபத்து - அரசுக்கு இபிஎஸ் கண்டனம்
அறந்தாங்கி முத்துமாரியம்மன் கோயில் தேரை அலங்கரிக்கும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். பக்தர்கள் இடர்பாடின்றி வணங்கும் வகையில் கோயில்களின் தரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் கோயில்களின் சிறப்புவாய்ந்த தேர்களை திமுக அரசு சரிவர பராமரிக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி