அலைக்கற்றை ஏலத்திற்கு ரூ.4350 கோடி டெபாசிட்

51பார்த்தது
அலைக்கற்றை ஏலத்திற்கு ரூ.4350 கோடி டெபாசிட்
இந்தியாவில் அலைக்கற்றை ஏலம் நடைபெறவுள்ளது. அதன்படி, வருகிற ஜூன் 6 ஆம் தேதி தொடங்கும் இந்த அலைக்கற்றை ஏலத்தில் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. அதில், முக்கியமாக ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் பங்கேற்க தயாராக இருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்கள் மொத்தம் 4ஆயிரத்து 350 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளதாக தொலைத் தொடர்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி