நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜராகும் சவுக்கு சங்கர்

74பார்த்தது
நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜராகும் சவுக்கு சங்கர்
லால்குடி கிளைச் சிறையில் இருந்து யூடியூபர் சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்திற்கு நேற்று (மே 16) அழைத்து செல்லப்பட்டார். திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் மீண்டும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்தனர். அதன் பேரில் நேற்று சவுக்கு சங்கர், திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நேற்று தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று (மே 17) மாலை 4 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

தொடர்புடைய செய்தி