மத்திய பிரதேசம் மாநிலம் சித்திரக்கூட்டில் வனவாசத்தின் போது ராமன், லக்ஷ்மன், சீதா ஆகியோர் சென்றதாக கூறப்படும் இடங்களில் கோவில்கள் அமைக்க மத்திய பிரதேசம் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து 400 கோடி ரூபாய் கடன் வாங்கவும் மத்திய பிரதேச அரசு முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர கிடைத்துள்ளது.