கொள்ளிடம் ஆற்றில் 3 மாணவர்கள் சடலமாக மீட்பு

57பார்த்தது
கொள்ளிடம் ஆற்றில் 3 மாணவர்கள் சடலமாக மீட்பு
அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி மாயமான 3 மாணவர்கள் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. அம்பத்தூரை சேர்ந்த 8 மாணவர்கள் உட்பட 9 பேர் சென்னையில் இருந்து தஞ்சைக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்துள்ளனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்து திரும்பும் வழியில் கொள்ளிடம் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது மாணவர் பச்சையப்பன் என்பவர் நீரில் சிக்கிக் கொண்டார். அவரை காப்பாற்ற மற்ற மாணவர்கள் முயற்சி செய்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி