சட்டமன்றத் தேர்தலுக்கும், மக்களவைத் தேர்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்திருந்தால் வென்றிருப்போம் என்று, நடந்து முடிந்ததைப் பற்றி பேசக் கூடாது. தேர்தலுக்கு முன்பு அண்ணாமலை பல கனவுகளை கண்டிருப்பார். தேர்தல் முடிவில் அவரது கனவு பலிக்கவில்லை என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.