எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கையின் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த பாம்பன் மீனவர்களை ஒரு விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 14 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.