100 நாள் வேலை ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

14673பார்த்தது
100 நாள் வேலை ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு கடந்த ஏப்ரல் 1 முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், கடந்த 2006ஆம் வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில், குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு வேலை தரப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன. தமிழகத்தில் 2023-24 நிதி ஆண்டுக்கு இந்த திட்டத்தின்கீழ் தினசரி ஊதியம் ரூ.294 வழங்கப்படும் நிலையில், புதிய ஊதியம் 2024-25 நிதி ஆண்டுக்கு ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.25 கூடுதலாக அளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி