சிறுத்தையை சுட்டுக்கொன்றது தொடர்பாக 10 பேருக்கு சம்மன்

77பார்த்தது
சிறுத்தையை சுட்டுக்கொன்றது தொடர்பாக 10 பேருக்கு சம்மன்
சேலம் கொளத்தூர் அருகே வெள்ளக்காரட்டூரில் கடந்த மாதம் சிறுத்தை பதுங்கி அட்டகாசம் செய்து வந்தது. செப்., 24ஆம் தேதி கருங்கரடு பகுதியில் சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. சிறுத்தை துப்பாக்கியால் சுட்டு கொன்றது உடற்கூறாய்வில் தெரியவந்தது. அதேபகுதியை சேர்ந்த முனுசாமி, சசி, ராஜன் ஆகிய 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். 10-க்கும் மேற்பட்டவர்களை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு வனத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி