விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், கிடங்கல் கோட்டை அறம் வளர்த்த நாயகி உடனுறை அன்பு நாயக ஈஸ்வரர் சிவாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்ததால் கோவில் வளாகத்தில் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
முன்னதாக கோவில் முன்புறம் நந்திகேஸ்வரர் மற்றும் கொடிமரம் அருகே யாக சாலை பூஜை நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான மூலிகை பொருட்கள், நவதானியங்கள் வெண்கடுகு, நாட்டு சர்க்கரை, கற்கண்டு, நெய், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் யாகசாலையில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து யாகசாலையில் பூர்ணாஹூதி செலுத்தப்பட்டது.
பின்னர் மாலை மாற்று வைபவமும், அதனைத் தொடர்ந்து காப்பு கட்டுதலும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான மங்கல நாண் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.