பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, உடுமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அவர் பேசுகையில், "தற்போது இரண்டு அமைச்சர்கள் சுய லாபத்திற்காக தற்போழுது பழனி மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டு, உடுமலை மற்றும் மடத்துக்குளம் தொகுதிகளை இணைக்கப்படும் என்ற தகவல் வேகமாக பரவி வருகின்றது. இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கின்றேன். தமிழக அரசு உடனடியாக உடுமலை மடத்துக்குளம் பகுதிகளை பழனி மாவட்டத்திற்கு இணைக்க கூடாது. மேலும், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உடுமலையை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். எனவே, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவுப்படி தமிழக சட்டமன்றத்தில் இது குறித்து கவனஈர்ப்பு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, தீர்வு காணப்படும்" என தெரிவித்தார்.
தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் தொழில் பழகுநர் வேலைவாய்ப்பு