இதன் ஒரு பகுதியாக, அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட பொருளாளர் சேவியர் உள்ளிட்ட அதிமுகவினர், மணிகண்டம் ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள, வடக்கு தெரு, மேல தெரு, அன்பு நகர், அடைக்கல மாதா கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக சென்று, அதிமுகவின் திட்டங்கள் குறித்தும், தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் எடுத்துரைத்து திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மேலும், வீடுகள் தோறும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வில்லைகள் (ஸ்டிக்கர்) ஒட்டும் பணிகளில் ஈடுபட்டனர். முன்னதாக, அப்பகுதி விளையாட்டு திடலில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மத்தியில் துண்டு பிரசுரம் வழங்கி அதிமுகவினர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.