திமுக மடியில் கணம்.. வழியில் பயம்

சென்னை எழும்பூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சார்பில் இன்று (ஜூன் 27) உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி போராட்டம் நடக்கிறது. இதில் கலந்துக் கொண்ட டி.ஜெயக்குமார் பேசுகையில், “இவ்வளவு பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்திருக்கின்றனர், சிபிஐ விசாரணை வைக்க வேண்டியது தானே? அவர்கள் மடியில் கணம் உள்ளதால் வழியில் பயம் உள்ளது. சிபிஐ விசாரணை நடத்தினால் ஆளும் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் சிக்குவார்கள்.” என்றார்.

தொடர்புடைய செய்தி