மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மணல் ஆலை ஊழியர் பலி.

கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் மரியஜான். இவருடைய மகன் நிபில் (வயது 21). இவர் மணவாளக் ணவாளக்குறிச்சியில் உள்ள மணல் ஆலையில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நிபில் தனது மோட் டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பாம்பன்விளை மெயின்ரோடு பகுதியில் வந்தபோது எதிரே வேம்பனூர் பரப்புவிளை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் நிபில் மற்றும் மணிகண்டன் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த நிபில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த மணி கண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி