கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.

66பார்த்தது
கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.
குமரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் நேற்று தடிகாரன்கோணம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண் டுபிடிக்கப்பட்டது. அதை கேரளாவுக்கு கடத்த முயன்ற தும் தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ரேஷன் அரிசி கடத்த முயன்ற அதே பகுதியை சேர்ந்த வில்சன், செல்வகுமார், ஜெபராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி