அதிக பாரம் ஏற்றி வந்த லாரி பறிமுதல் டிரைவர் கைது.

52பார்த்தது
பூதப்பாண்டி சப்-இன்ஸ்பெக்டர் லெட்சுமணன் தலைமையிலான போலீசார் இறச்சகுளம் ராஜீவ் நகர் பகுதியில் நேற்று மாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் அளவுக்கு அதிகமாக பாறைப்பொடி ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் லாரி டிரைவரான குலசேகரம் பகுதியை சேர்ந்த சுபாஷ் (வயது 36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி