இந்த நிலையில் சம்பவ தினம் ராஜமணி விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் கண்ணன் என்பவர் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து