அரசு எச்சரிக்கை: குற்றவியல் நடவடிக்கை பாயும்

ஆம்னி பேருந்துகள் சென்னை மாநகருக்குள் பயணிகளை ஏற்றுவதோ, இறக்கி விடுவதோ அனுமதிக்கப்படாது எனவும் மீறினால் குற்றவியல் சட்டப்படி ஆம்னிபேருந்து ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர். இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில் போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்துதான் இயங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி