கோவிலில் அநாகரீக செயலில் ஈடுபட்ட கும்பல்.. (வீடியோ)

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியில் சமீபத்தில் அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. இந்து கோவிலில் அநாகரீக செயல்களில் ஈடுபட்ட மூன்று இளம் பெண்களும் ஒரு இளைஞனும் பக்தர்களால் பிடிபட்டனர். அவர்களது ஆதார் அட்டையை ஆய்வு செய்த பக்தர்கள், அந்த இளைஞர் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்து கோபமடைந்தனர். அவர்களிடம் கருத்தடை மாத்திரைகள் மற்றும் ஆணுறைகளும் காணப்பட்டன. பக்தர்கள் இளம் பெண்களை கோவிலில் இருந்து வெளியேற்றியதோடு, அந்த இளைஞனை பிடித்து வைத்து எச்சரித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி