அதன் பிறகு மீண்டும் அதனை சரி செய்யாமல் விட்டு விட்டதால் தற்போழுது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைகின்றன. வாகன விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. இதனால் வேடசந்தூர் காவல்துறையினர் உடனடியாக போக்குவரத்து சிக்னலை சீர் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து வேடசந்தூர் இன்ஸ்பெக்டரிடம் கேட்ட போழுது உடைந்து விழுந்த சிக்னல் கம்பத்தை சரி செய்ய வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் யாராவது முன்வந்து அதற்கான செலவு தொகையை ஏற்றுக் கொண்டால் உடனடியாக மீண்டும் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.