சுபமுகூர்த்தம் மற்றும் விழாக்காலங்களில் தேவை அதிகமாக இருப்பதால் வாழைப்பழதார்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து வாழைப்பழ வியாபாரிகள் கூறியதாவது: - வாழைத்தார் வரத்து குறைவானதால் வாழைப்பழங்களின் விலை உயர்ந்துள்ளது. ரூ. 300க்கு விற்ற பச்சை வாழைப்பழத்தார் ரூ. 350க்கும், ரூ. 250 க்கு விற்ற கற்பூரவள்ளி ரூ. 350க்கும், ரூ. 200 க்கு விற்ற நாட்டுப்பழம் ரூ. 300க்கும், ரூ. 500 க்கு விற்ற செவ்வாழை ரூ. 600 க்கும், ரூ. 400 க்கு விற்ற ரஸ்தாலி ரூ. 600க்கும் விற்கப்படுகிறது. சில்லரை விலையில் செவ்வாழை ரூ. 8 க்கும், பச்சைப்பழம் ரூ. 6க்கும், கற்பூரவல்லி, பூவன் ரூ. 5 க்கும், ரஸ்தாலி ரூ. 6 க்கும், நாட்டுப்பழம் ரூ. 5 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தினசரி தேவையை விட வாழைத்தார்களின் வரத்து குறைவாகவே உள்ளது. அதிக விலை கொடுத்து வாங்குவதால் நாங்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறோம் என்றனர்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து