எந்த ஒரு காரியம் என்றாலும் அதற்கு முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்யும் போது வெற்றியும் வரலாம், தோல்வியும் வரலாம். ஒருவர் தனது முயற்சியில் தோல்வி அடைந்தாலும் கூட, நிதானமாக தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து விடாமுயற்சியுடன் தனது பயணத்தைத் தொடர வைத்தால், வெற்றியை அது கிடைக்கச் செய்யும். மேலும் வெற்றி என்பது ஒரே நாளில் கிடைத்து விடாது என்கிற விஷயம் இவர்களுக்கு கிடைத்த அனுபவம் நன்றாகவே உணர வைத்திருக்கும்.